பிராந்திய சமநிலை குறித்து சிங்கப்பூர் அதிபரின் கருத்து..!!!

பிராந்திய சமநிலை குறித்து சிங்கப்பூர் அதிபரின் கருத்து..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு வழங்கிய பேட்டியில், சிங்கப்பூர் மற்றும் ஆசியான் நாடுகள் பிராந்தியத்தை எந்த ஒரு பெரிய சக்தியாலும் ஆதிக்கப்படாமல் திறந்த மற்றும் உள்ளடக்கியதாக வைக்க விரும்புகின்றன என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் வோங் கூறியதாவது, தனிப்பட்ட ஆசியான் நாடுகள் சீனா மற்றும் அமெரிக்காவுடன் வெவ்வேறு உறவுகளை பேணுகின்றன. “சிங்கப்பூர் அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு கூட்டாளியாகும்.இருப்பினும், சில நாடுகள் சீனாவுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருக்கின்றன. ஆனாலும், ஆசியான் ஒட்டுமொத்தமாக எந்த ஒரு நாட்டாலும் ஆதிக்கம் நிலைபெறவேண்டாம் என்று விரும்புகிறது,” என்று அவர் கூறினார்.

அதனுடன், சிங்கப்பூர் அனைத்து முக்கிய சக்திகளுடனும் தீவிர ஈடுபடுவதே தனது உத்தி என்று வோங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை பிராந்திய விவகாரங்களில் அதிக ஈடுபாட்டிற்கு அழைக்கும் சிங்கப்பூர், பாதுகாப்பு மட்டுமின்றி பொருளாதாரத் துறையிலும் இந்த முயற்சியை முன்னெடுக்கிறது.

அமெரிக்கா பசிபிக் பகுதியில் குறிப்பிடத்தக்க நலன்களைக் கொண்ட நாடு எனவும், பிராந்திய விவகாரங்களில் அதன் ஈடுபாட்டை ஆழப்படுத்துவது அமெரிக்காவின் நலனுக்கும், அமெரிக்கர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

மேலும், சீனாவின் அதிவேக ரயில் மற்றும் விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களால் சில நாடுகள் பயனடைந்துள்ளன. தென்கிழக்கு ஆசியாவில் பொதுமக்கள் இந்த திட்டங்களை நேர்மறையாக வரவேற்று, வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்கிறார்கள். இந்த புதிய திட்டங்களில் அமெரிக்க நிறுவனங்களும் முதலீடு செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan