சிங்கப்பூர்:சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓடியவர்!!

சிங்கப்பூர்: சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓடியவர்!!

கடந்த ஜூலை 7ஆம் தேதி Bugis Junction கடைத் தொகுதியில் உள்ள Hay yakiniku உணவகத்தில் பிற்பகல் 3:40 மணி அளவில் ஒரு ஆடவர் கடைக்கு சாப்பிட வந்துள்ளார்.

27.90 வெள்ளிக்கு உணவுவையும் வாங்கியுள்ளார். பின்னர் உணவகத்தின் பின்புற கதவு அருகே அமர்ந்து சாப்பிட அனுமதிக்கும்படி அவர் கேட்டுள்ளார்.

உணவை முழுவதுமாக சாப்பிட்டு முடிக்காமல் யாரும் கவனிக்காத நேரத்தில் அந்த ஆடவர் பின்புற கதவு வழியாக வெளியேறியுள்ளார்.

இருக்கையில் அந்த ஆடவர் இல்லை என்ற போது அவர் கழிவறை சென்றிருக்கலாம் என்று எண்ணியதாக பணியாளர்கள் கூறினார்.

ஒரு மணி நேரம் கழித்தும் ஆடவர் திரும்பாத போது தான் அவர் பணம் செலுத்தாமல் ஓடிவிட்டார் என்பதை உணர்ந்ததாக கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

இதுவரை அந்த ஆடவர் கட்டணம் செலுத்த வரவில்லை என்றும் சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கவில்லை என்றும் உணவகத்தின் மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan