ஆங் மோ கியோவில் பரபரப்பை ஏற்படுத்திய விபத்து..!!

ஆங் மோ கியோவில் பரபரப்பை ஏற்படுத்திய விபத்து..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சந்திர புத்தாண்டின் முதல் நாளான இன்று (17.02.26) காலை, ஆங் மோ கியோ அவென்யூ 1 பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய கார் விபத்து ஒன்று நடைபெற்றது. இதில் கம்ஃபோர்ட்டெல்குரோ நிறுவனத்துக்குச் சேர்ந்த ஒரு வாடகை கார் கவிழ்ந்து, சாலையின் இரு பாதைகளிலும் கிடந்தது. சம்பவத்தில் இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டனர்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை,காலை 7.50 மணியளவில் ஆங் மோ கியோ அவென்யூ 1 மற்றும் பிஷான் சாலை சந்திப்பில் நடந்த போக்குவரத்து விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.அவசர சேவை குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தன.

இதனைத் தொடர்ந்து, நிலப் போக்குவரத்து ஆணையம் காலை 8.10 மணியளவில் சமூக ஊடக தளம் “எக்ஸ்” வழியாக அறிவிப்பு வெளியிட்டு, அப்பர் தாம்சன் சாலையை நோக்கிய ஆங் மோ கியோ அவென்யூ 1 பகுதியில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது பாதைகளைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக கம்ஃபோர்ட்டெல்குரோ நிறுவனம் விளக்கமளிக்கையில், சம்பந்தப்பட்ட வாடகை காரில் பயணிகள் எவரும் இல்லை என்றும், ஓட்டுநர் பாதுகாப்பாக உயிர் தப்பியுள்ளார் என்றும் தெரிவித்தது. அவர் காயமின்றி இருப்பதாகவும் கூறப்பட்டது.

நிறுவனம் தற்போது நிலைமையை நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும், தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. புத்தாண்டு காலையில் நடந்த இந்த விபத்து, அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK