கிக் ஸ்கூட்டரில் சாலையைக் கடந்த சிறுவன்..!!! விளையாட்டு விபரீதமானது..!!!

கிக் ஸ்கூட்டரில் சாலையைக் கடந்த சிறுவன்..!!! விளையாட்டு விபரீதமானது..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் விளையாட்டுத்தனமாக சிறுவன் ஒருவன் கிக் ஸ்கூட்டரில் சாலையை கடக்க முயன்ற போது டாக்ஸி மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அக்டோபர் 13-ம் தேதி மதியம் பூகிஸ் பகுதியில் உள்ள மிடில் ரோட்டில், ஒன்பது வயது சிறுவன் தனது கிக் ஸ்கூட்டரில் சாலையைக் கடக்க முயன்றான்.

அப்போது அவ்வழியாக வந்த டாக்ஸி ஒன்று அவன் மீது மோதியதில் சிறுவன் காயமடைந்தான்.

இச்சம்பவம் மதியம் சுமார் 2.40 மணியளவில் நடந்தது.

இந்த விபத்தில் காயமடைந்த சிறுவன் சுயநினைவுடன் இருந்த நிலையில், சிகிச்சைக்காக கேகே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

டாக்ஸி செல்வதற்கான சிக்னலில் பச்சை விளக்கு எரிந்துகொண்டிருந்தபோது சிறுவன் வேகமாக சாலையைக் கடப்பது, காரில் இருந்த கேமரா பதிவில் தெளிவாக காணப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK