பூன் லே டிரைவில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம்..!! என்ன நடந்தது..??

பூன் லே டிரைவில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம்..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூர்:பூன் லே டிரைவில் உள்ள HDB குடியிருப்பு தொகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் 58 வயது நபர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

போலீசார் தெரிவித்ததாவது, டிசம்பர் 6 ஆம் தேதி மாலை 6:55 மணியளவில் பூன் லே டிரைவ் பிளாக் 188இல் இருந்து உதவி கோரி பல அழைப்புகள் வந்தன.

சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள், தரையில் காயமடைந்த நிலையில் இருந்த 58 வயது நபரை கண்டனர்.

அவர் சுய நினைவுடன் இருந்ததால், உடனடியாக அவரை மீட்டு இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில், 32 வயது ஆண் ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தற்போது அவர் தப்பிச் சென்றுள்ள நிலையில், அதிகாரிகள் தீவிரமாக தேடிவருகின்றனர்.

சம்பவ இடத்திலிருந்து இரண்டு கத்திகளும் ஒரு சமையலறை கத்தியும் ஆதாரமாக மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK