புதுச்சேரி தேர்தலில் வாக்காளர்களுக்கு வித்தியாச வரவேற்பு..!!

புதுச்சேரி தேர்தலில் வாக்காளர்களுக்கு வித்தியாச வரவேற்பு..!!

புதுச்சேரியில் நேற்று முன்தினம்  (ஏப்ரல் 9) நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற வாக்காளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது.

வாக்குச்சாவடிக்கு சென்ற வாக்காளர்களையும் வித்தியாசமான முறையில் வரவேற்பு இருந்தது எதிர்பாராத ஒன்றாக இருந்தது.

அந்த ரோபோ வாக்காளர்களை வரவேற்று உபசரித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த ரோபோவின் பெயர் நிலா.

புதுச்சேரியில் உள்ள மூன்று அரசு பள்ளிகள் தனித்துவம் வாய்ந்த வாக்குச்சாவடிகளாக வகைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மூன்று பள்ளிகளும் சமீபத்தில் அழகுப்படுத்தப்பட்டு இருந்தன.

இந்த வாக்கு சாவடிகளில் வாழைமரம் வைக்கப்பட்டு, தோரணங்கள், கட்டி தென்னை ஓலை பந்தலும் அமைக்கப்பட்டிருந்தன.

ஏப்ரல் 9, 2026 நடைபெற்ற வாக்குப்பதிவின்போது இந்த மூன்று பள்ளிகளுக்கும் வந்த வாக்காளர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருந்தனர்.

ஏனென்றால், வாக்காளர்களை வரவேற்பு என்பதற்காக ரோபோ நிலா அங்கிருந்தது. அந்த ரோபோ வருபவர்களுக்கு பன்னீர் தெளித்து, செம்பருத்தி பூ வழங்கியது.

தேர்தலில் வாக்களிப்பதனுடைய அவசியம் குறித்த மக்களிடையே தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதனுடன் இந்த நடவடிக்கைகளும் ஒன்றாக இணைந்துள்ளதை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK