அவர்கள் மீது மின் வணிக மோசடிகள், போலி நண்பர்கள் அல்லது அரசு அதிகாரிகளாக நடித்து பண மோசடி செய்தல், வேலை தேடுதல் மோசடிகள், முதலீட்டு மோசடிகள், வாடகை மோசடிகள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் குறித்துப் புகார் பதிவாகியுள்ளது.
அத்துடன், சந்தேக நபர்கள் மோசடி, பணமோசடி மற்றும் உரிமம் பெறாத கட்டண சேவைகள் வழங்கியிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் குற்றத்திற்கு உடந்தையாக இருக்காமல் இருக்க, தங்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் மொபைல் எண்களை பிறருக்குக் கொடுக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.