என்னது!! டோட்டோவில் முதல் பரிசு…..10 மில்லியன் டாலரா!!

என்னது!! டோட்டோவில் முதல் பரிசு.....10 மில்லியன் டாலரா!!

டோட்டோவில் தொடர்ச்சியாக மூன்று டிராக்களில் முதல் பரிசை யாரும் வெல்லவில்லை.

வியாழக்கிழமை 19ஆம் தேதி குலுக்கப்பட்ட டோட்டோ பரிசுத்தொகை 10 மில்லியன் டாலரை எட்டியுள்ளது.

இது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

சிங்கப்பூர் பூல்ஸ் வலைத்தளம் 16 ஆம் தேதி வெற்றி எண்கள் 5,18,27,32,48,49 என்றும் கூடுதல் எண் 21 என்றும் காட்டுகிறது.

ஜூன் 16,12,9 ஆகிய தேதிகளில் நடந்த ஜாக்பாட்களின் முதல் குழுவில் வெற்றியாளர்கள் யாரும் இல்லாததால் பரிசு தொகை தொடர்ந்து குவிந்து கொண்டே இருக்கிறது.

சிங்கப்பூர் பூல்ஸ் வலைதளத்தின் படி இந்த வியாழக்கிழமை டோட்டோவிற்கான லாட்டரி குலுக்கல் நேரம் இரவு 9:30 மணி வரை தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.