ஆந்திர மாநிலம் விசாகபட்டிணம் அனந்தகிரி மலையில் முலகும்மி அருவி உள்ளது. ஜம்புவாலசா என்ற கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுமியர் இந்த அருவிக்கு நேற்று (10-04-26) சென்றுள்ளனர்.
அப்போது அருவி அருகே உள்ள வழுக்கு பாறையில் நின்று அவர்கள், சுய புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது திடீரென பாறை வழுக்கி மூவரும் விழுந்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால், மூவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் அவர்களில் ஒரு சிறுமியை மீட்டனர். திரிஷா, 17, ரத்ன குமாரி, 16, பவித்ரா, 16, ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை போலீசார் மீட்டனர்.
இந்த துயரச் சம்பவம், சுற்றுலாத் தலங்களில் நாம் காட்டும் சிறு கவனக்குறைவு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான துயர சான்றாகிவிட்டது.
அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் உள்ள பாறைகள் எப்போதும் வழுக்கும் தன்மை கொண்டவை. பாசி படிந்த பாறைகளில் நாம் வைக்கும் ஒரு தவறான அடி, மீள முடியாத ஆழத்திற்கு நம்மைக் கொண்டு சென்றுவிடும்.
நீச்சல் தெரியாத சூழலில் இத்தகைய நீர்நிலைகளுக்கு மிக அருகில் செல்வது தற்கொலைக்குச் சமமானது.