விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்தச் செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் வெளியிட முடியவில்லை.
எதிர் வருகின்ற ஏப்ரல் 24 அல்லது ஏப்ரல் 30 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு தேதியை தயாரிப்பு தரப்பு தேர்வு செய்து படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கிடையில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துவிடும் என்பதால் அரசியல் ரீதியில் இந்த படத்திற்கு சிக்கல் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை என விஜய் தரப்பு வருதவதாக கூறப்பட்டுள்ளது.