ஜெர்மனியின் புகழ்பெற்ற வாகன உற்பத்தியாளரான வோக்ஸ்வேகன் நிறுவனத்துடன் ஆன ஒத்துழைப்பை அதிகரித்து மின் வாகன தயாரிப்பை அதிகமாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இரண்டு நிறுவனங்களும் ஒருங்கிணைந்த செயல்பட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்றும் திரு கூ தெரிவித்துள்ளார்.
வாகன தயாரிப்பில் ஈடுபடும் மற்ற நிறுவனங்களுடனும் தங்களுடைய பங்களிப்புத்துவத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பறக்கும் கார்கள் தொடர்பில் இதுவரை எக்ஸ்பெங் நிறுவனம் 7,000 முன்பதிவுகளை பெற்றுள்ளதை குறிப்பிட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை சீனாவில் செய்யப்பட்டனர். சீன விமான போக்குவரத்து துறை அதிகாரிகளின் ஒப்புதலை பெறுவதற்கு எக்ஸ்பெங் நிறுவனம் காத்திருப்பதாக திரு கூ தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் தென் சீன நகரான குவாங்சூவில் ஓட்டுனர் இல்லாத மின் டாக்ஸிகளை சோதிக்கும் பணி தொடங்க உள்ளதாக கூறினார்