சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! அடுத்த இரண்டு வாரங்களுக்கு எப்படி இருக்கும்?

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! அடுத்த இரண்டு வாரங்களுக்கு எப்படி இருக்கும்?

சிங்கப்பூர் : இம்மாதமான மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சில நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தீவின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் கணித்துள்ளது.சில நாட்களில் மழை மாலை வரை நீடிக்கக்கூடும்.

சில நாட்களில் காலை நேரத்தில் பலத்த காற்று வீசி இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

முதல் இரண்டு வாரங்களுக்கு தீவின் பெரும்பாலான பகுதிகளில் மொத்த மழைப்பொழிவு சராசரியை நெருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை :

பெரும்பாலான நாட்களில் அன்றாட அதிகபட்ச வெப்பநிலை சுமார் 34 டிகிரி செல்சியஸாக பதிவாகும் என்று கூறப்படுகிறது.

சில நாட்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan