அதிர்ச்சி…!!! ஒரு கோடி ரூபாய் கேட்டு முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்…!!!

அதிர்ச்சி...!!! ஒரு கோடி ரூபாய் கேட்டு முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்...!!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து முகமது ஷமியின் சகோதரர் ஹசீப் உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்திலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.ராஜ்புத் சிந்தார் என்பவர் இந்த மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். தற்போது முகமது ஷமி 2025 ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால் அவருக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார்.அவரை 10 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.கடந்த ஐபிஎல் சீசனில் இரண்டாம் இடத்தைப் பிடித்த சன்ரைசர்ஸ் அணி பிளேஆஃப் தகுதிக்கான போட்டியில் இருந்து வெளியேறிவிட்டது. 10 ஆட்டங்களில் மூன்று வெற்றிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 56.17.

2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முகமது ஷமி சிறப்பாக விளையாடினார்.அப்போது அவர் 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

வங்கதேச அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்ட அவர் ஐபிஎல்லில் சுமாராக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு மின்னஞ்சல் வழியாக கொலை மிரட்டல் வந்துள்ளது. ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் உன்னை கொன்று விடுவேன் என்பது போல் அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டம் (BNS), 2023 பிரிவு 308(4), தகவல் தொழில்நுட்ப (திருத்தம்) சட்டம், 2008 பிரிவு 66d மற்றும் தகவல் தொழில்நுட்ப (திருத்தம்) சட்டம், 2008 பிரிவு 66e ஆகிய பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது,

முகமது ஷமிக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் மின்னஞ்சல் போல், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் சில நாட்களுக்கு முன் மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. காஷ்மீர் தாக்குதல் விவகாரம் குறித்து அவர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.இதையடுத்து அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.