மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு தகுதி..!!

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு தகுதி..!!

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் யுஷி தனகாவை எதிர்கொண்டார்.

இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரீகாந்த் 21-18, 24-22 என்ற நேர் செட்களில் தனகாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

32 வயதான ஸ்ரீகாந்த் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இந்தியா ஓபன் 2019 மற்றும் 2021ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குப் பிறகு ஸ்ரீகாந்த் தனிநபர் நிகழ்வின் முதல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த், சீனாவின் லி ஷி பெங்கை எதிர்கொள்கிறார்.