சிங்கப்பூரில் வேக வரம்பை மீறி வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு கூடுதல் தண்டனை!!

சிங்கப்பூரில் வேக வரம்பை மீறி வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு கூடுதல் தண்டனை!!

சிங்கப்பூரில் வேக வரம்பை மீறுபவர்களுக்கு கூடுதல் அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும்.குறைந்தபட்சம் 6 குற்றப்புள்ளிகளும் ,200 வெள்ளி அபராதமும் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் இன்று ( மே 28) தெரிவித்தது.

2026 ஜனவரி முதல் தேதியில் இருந்து இந்த கூடுதல் தண்டனை அமலுக்கு வரும்.

வேகா வரம்பை விட மணிக்கு 20 கிலோமீட்டர் அல்லது அதை விட வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தற்போது 4 குற்றப்புள்ளி விதிக்கப்படுகிறது .அடுத்த ஆண்டு முதல் ஆறாக அதிகரிக்கும்.

அவர்கள் ஓட்டி செல்லும் வாகனத்தைப் பொறுத்து 200 அல்லது 250 வெள்ளி நேரடி அபராதம் விதிக்கப்படலாம்.

வேக வரம்பை விட மணிக்கு 50 கிலோமீட்டர் வேகமாக ஓட்டுபவர்களுக்கு 24 குற்றப்புள்ளிகள் விதிக்கப்படும். அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு மட்டும் இல்லாமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

கடந்த 5 ஆண்டுகளாக சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்கள்.காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

கடந்த ஆண்டில் 7188 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. 142 பேர் உயிரிழந்துள்ளனர்.