ஹூகாங் அவென்யூ 3 மற்றும் லோரோங் ஆ சூ சந்திப்பில் ஜூன் 2 ஆம் தேதி மாலை 6.45 மணியளவில் ஒரு போக்குவரத்து விபத்து நடந்தது. இந்த விபத்தில் ஒரு வேன்,ஒரு லாரி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டன.
இச்சம்பவத்தில் 58 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் , லாரியில் பயணம் செய்த 37 மற்றும் 21 வயதுடைய இருவர் உள்ளிட்ட மூவரையும் செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவர்கள் சுயநினைவுடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக 38 வயதுடைய வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளது.சேதமடைந்த வாகனங்களை இழுத்து செல்வதையும், கார் பாகங்கள்,கண்ணாடிகள் மற்றும் உடைந்த மரக்கிளைகள் பாதையில் சிதறி கிடப்பதை அதில் காணலாம்.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.