கேலாங் ஸ்ரீ சிவன் கோவில் குடமுழுக்கு விழா..!!!

கேலாங் ஸ்ரீ சிவன் கோவில் குடமுழுக்கு விழா..!!!

சிங்கப்பூர்: கேலாங் ஈஸ்டில் உள்ள ஸ்ரீ சிவன் கோவிலில் இன்று( ஜூன் 8) குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை 7:15 மணிக்கு கடப்புறப்பாடு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து காலை 8:30 மணி அளவில் ஆலய கோபுரங்களுக்கு நன்னீர் ஊற்றப்பட்டு தீப ஆராதனை காட்டப்பட்டது.

இது கோவிலில் நடைபெறும் மூன்றாவது குடமுழுக்கு விழா ஆகும். இதில் பங்கேற்க சுமார் 20,000 பக்தர்கள் கூடியுள்ளனர்.

உள்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா.சண்முகம் சிறப்பு விருந்தினராக கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.

இந்த விழாவில் சுமார் 2000 பக்தருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் mediacorp seithi இல் வெளியிடப்பட்டுள்ளது.