சிங்கப்பூர் பொதுமக்கள் கவனத்திற்கு..!! பொது இடங்களில் குப்பை போட்டால் என்ன தண்டனை தெரியுமா..??
சிங்கப்பூர் தேசிய சுற்றுச்சூழல் முகமை (NEA) பொது இடங்களில் குப்பை போடுபவர்களைக் கடுமையாக தண்டிக்கும் வகையில் ஆண்டின் முதல் காலாண்டில் 3000க்கும் மேற்பட்ட அபராதங்களை விதித்துள்ளது.
தூய்மையான மற்றும் பசுமையான சிங்கப்பூரைப் பராமரிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கையை NEA தீவிரப்படுத்தி உள்ளது.
சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் பொது சுகாதார சட்டத்தின் படி, முதல் முறை தவறு செய்பவர்களுக்கு சம்பவ இடத்திலேயே $300 அபராதம் விதிக்கப்படும்.
குப்பை போடும் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் தாண்டிக்கப்படுபவர்களுக்கு முதல் முறை என்றால் $2000 அபராதம், 2வது முறை என்றால் $4000 அபராதம், 3வது முறை அல்லது அதற்கு மேலாக இருந்தால் $10,000 அபராதமும் விதிக்கப்படும்.
விபத்தில் சிக்கிய கார் மீண்டும் சாலைக்கு வந்த போது, போக்குவரத்து சிக்னலில் காத்திருந்த ஒரு டாக் வி மற்றும் மற்றொரு கார் மீது மோதியது. கார் மோதியதில் டாக்சி சிறிது தூரம் முன்னோக்கி சென்று நிற்பதும் அந்த வீடியோவில் நன்றாக தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொது இடங்களில் யாரேனும் குப்பை போடுவதைக் கண்டால் அல்லது தூய்மை சீர்கேடு நிலவினால் மக்கள் myENV என்ற மொபைல் செயலி வழியாக புகார் அளிக்கலாம் என்று NEA பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.