சிங்கப்பூரின் 61-வது தேசிய தினக் கொண்டாட்டம்: இன்று மாலை பிரதமர் லாரன்ஸ் ஹோங் உரை..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 61-வது தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு (SG61) முன்னோடியாக, பிரதமர் லாரன்ஸ் வோங் இன்று (ஆகஸ்ட் 8, சனிக்கிழமை) மாலை 6:45 மணிக்குத் தனது அதிகாரப்பூர்வ தேசிய தினச் செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்கி உரை ஆற்றுகிறார்.
நாளை (ஆகஸ்ட் 9) தேசிய தினம் விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில், நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சவால்கள், தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைவாய்ப்பு மாற்றங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பிரதமர் தனது உரையில் முக்கியக் கருத்துகளைப் பகிர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு மொழிகளில் ஒளிபரப்பு விவரங்கள்: சிங்கப்பூரின் பன்முகப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், பிரதமரின் இந்தத் தேசிய தினச் செய்தி நாட்டின் நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளிலும் ஒளிபரப்பப்பட உள்ளது:
ஆங்கிலம்: பிரதமர் லாரன்ஸ் வோங் நேரடியாக ஆற்றிய உரை மாலை 6:45 மணிக்கு CNA தொலைக்காட்சி மற்றும் CNA938 வானொலியில் ஒளிபரப்பாகும்.
சீன மொழி: துணைப் பிரதமரும் வர்த்தக தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் ஆற்றிய உரை மாலை 7:00 மணிக்கு வசந்தம் (Channel 8) மற்றும் கேப்பிட்டல் (Capital 95.8FM) வானொலியில் ஒளிபரப்பாகும்.
மலாய் மொழி: முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் பாதுகாப்புக்கான மூத்த இராஜாங்க அமைச்சருமான ஸாக்கி முகமது ஆற்றிய உரை இரவு 8:30 மணிக்கு சூரியா (Suria) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
தமிழ் மொழி: கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவள அமைச்சின் இராஜாங்க அமைச்சர் தினேஷ் வாசு தாஷ் ஆற்றிய தமிழ் உரை இரவு 9:00 மணிக்கு வசந்தம் (Vasantham) தொலைக்காட்சி மற்றும் ஒலி 96.8FM வானொலியில் ஒளிபரப்பாகும்.
தேசிய தினத் தீம் மற்றும் தயாரிப்புகள்: இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டங்கள் “Majulah Singapura, Go Beyond!” எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன. இது சிங்கப்பூர் மக்கள் ஒன்றிணைந்து சாதனைகளைத் தாண்டி மேலும் முன்னேற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடர்ந்து, பிரதமரின் தேசிய தின செய்தி பிரதமரின் அலுவலக (PMO) அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், அதன் யூடியூப் (YouTube) பக்கத்திலும் வெளியிடப்படும்.
மேலும், தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் லாரன்ஸ் வோங் நிகழ்த்தும் முக்கியக் கொள்கை விளக்க உரையான ‘தேசிய தினப் பேரணி உரை’ (National Day Rally) வரும் ஆகஸ்ட் 23 அன்று அங் மோ கியோவில் உள்ள ITE கல்லூரி மத்திய வளாகத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.