சிங்கப்பூரில் 23 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 23 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் எட்டோமிடேட் அடங்கிய மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜ்களைக் கடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில்,23 வயது இளைஞர் ஒருவர் மீது கடந்த மாதம் 31ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சுகாதார அறிவியல் ஆணையம்(HSA) இன்று (ஜூலை 7)வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த ஜூலை 30 அன்று கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் ஹெளகாங்கில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் முடிவில், அவரது வீட்டிலிருந்து 2 மின்னணு சிகரெட்டுகள் மட்டும் 55 மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜ்களை ஆய்வு செய்ததில், அவற்றில் ‘எட்டோமிடேட்’ என்ற ஆபத்தான நச்சுப்பொருள் கலந்திருப்பது சோதனை முடிவுகளில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் சட்ட விரோதக் கடத்தல் சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடையவரான டடீன் டேனியல் ஓங் மேல்விசாரணைகளுக்கு உதவுவதற்காக 1 வாரத்திற்கு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு, செப்டம்பர் 18ஆம் தேதி அன்று ஒத்திவைக்கப்பட்டது.

அந்த நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 5 முதல் 15 பிரம்படிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.