மோசடி வலையில் சிக்கிய பெண்…!!! பணத்தை இழந்தது எப்படி..?? தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!

மோசடி வலையில் சிக்கிய பெண்...!!! பணத்தை இழந்தது எப்படி..?? தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பெண் ஒருவர் கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடியில் சிக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் அந்தப் பெண்மணி ஒரே மாதத்தில் S$2,47,000 க்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார்.

பணத்தை இழந்தது எப்படி…??

நேற்று (20.06.25) காலை 11:10 மணிக்கு வங்கியில் இருந்து ஒரு பெண் அதிக தொகையை எடுக்க முயன்றபோது,வங்கி பரிவர்த்தனையை இடைமறித்தது.

இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து, பணத்தை எடுத்ததன் நோக்கத்தைக் கேட்டனர்.

அவர் ஒரு கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடிக்கு பலியாகியிருக்கலாம் என்பது தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் காவல்துறை தலையிடுவதற்கு முன்பு, அந்தப் பெண் வேறொரு வங்கிக் கிளையிலிருந்து $53627.31 மேல் பணத்தை எடுத்து,கிரிப்டோகரன்சிக்கு ஈடாக அதை ஒரு நபருக்கு கொடுத்தது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

மே மாதம் முதல் இன்றுவரை,அந்தப் பெண் S$2,47,000 க்கு மேல் பணத்தை அந்த நபரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்பில் சந்தேகப்படும் 23 வயது நபரை அதிகாரிகள் உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கைது செய்தனர்.

மேலும் அந்த நபரிடமிருந்து வேறொருவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் வங்கி அட்டையையும் இரண்டு மொபைல் போன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கணினித் தரவை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகியதாக இன்று அந்த நபர் மீது குற்றம் சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதல் குற்றத்திற்கு அவருக்கு $5,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும், மீண்டும் குற்றத்தைச் செய்தால் $10,000 வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉👉 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan