மரணத்தில் முடிந்த உட்லேண்ட்ஸ் உணவுவிடுதி மோதல்..!!!

மரணத்தில் முடிந்த உட்லேண்ட்ஸ் உணவுவிடுதி மோதல்..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் உட்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு உணவு விடுதியில் ஏற்பட்ட மோதலில் 73 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 57 வயது நபர் மீது கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தியோ எங் சாய் என அடையாளம் காணப்பட்ட 57 வயது சந்தேக நபர், மற்றொரு நபருக்கு வேண்டுமென்றே கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவித்ததாக நேற்று (23.12.25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அவரது செயல்களால்,73 வயது பாதிக்கப்பட்டவரின் கழுத்தில் உள்ள எலும்பு முறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், குற்றப்பத்திரிகையில் பிரதிவாதி இறந்தவரை எந்த வகையில் காயப்படுத்தினார் என்பது குறித்து குறிப்பிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் 21 ஆம் தேதி மாலை, உட்லேண்ட்ஸ் அவென்யூ 6, பிளாக் 768 இல் அமைந்துள்ள ஒரு உணவு விடுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. இரவு 9.20 மணியளவில் உதவிக்கான அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது பாதிக்கப்பட்டவர் மயக்க நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதற்கட்ட விசாரணைகளில், இறந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது பின்னர் உடல் ரீதியான மோதலாக மாறியதாகவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் நடந்த நாளிலேயே பிரதிவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.தற்போது, விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை மீண்டும் கட்டமைக்கும் நோக்கில், அவரை வெளியே அழைத்துச் செல்லவும் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை டிசம்பர் 30 ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK