வளைவில் திரும்பிய 69 வயதுடைய பெண் மீது மோதிய பேருந்து!!

வளைவில் திரும்பிய 69 வயதுடைய பெண் மீது மோதிய பேருந்து!!

சிங்கப்பூரில் சேவை எண் 222 கொண்ட பேருந்து மோதியதில் 69 வயது பெண் ஒருவர் காயமடைந்தார்.அவர் மின்சாரம் பொருத்தப்பட்ட சைக்கிளில் சாலை சந்திப்பில் திரும்பும் போது நடந்தது.

இச்சம்பவம் ஏப்ரல் 25 அன்று மாலை பெடோக் நார்த் அவென்யூ 3 மற்றும் பெடோக் நார்த் ஸ்ட்ரீட் சந்திப்பில் நடந்தது.

இந்த சம்பவம் குறித்து மாலை 5.40 மணியளவில் போலீசாருக்கு தகவல் வந்தாக தெரிவித்தது.

சுயநினைவுடன் காயமடைந்த பெண் சாங்கி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை தெரிவித்தது.

அவர் சந்திப்பில் வலது பக்கம் திரும்பியபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை.

காயமடைந்த பெண்ணிற்கு பேருந்து ஓட்டுநர் உதவினார் என்று பொதுப் போக்குவரத்து ஆபரேட்டர் SBS டிரான்சிட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பேருந்து ஓட்டுநரிடம் இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும்,மேலும் காயமடைந்த பெண்ணிற்கு உதவுவதற்கும் அணுகி வருவதாக கூறினார்.