பெற்றோர்களே கவனம்..!! பள்ளி பெயரில் கட்டண மோசடி மின்னஞ்சல்..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கல்வி நிறுவனங்கள் பெயரில் மோசடிகள் அதிகரித்துள்ளன. கல்விக் கட்டணம் அல்லது பயிற்சிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று போலி மின்னஞ்சல்கள் அனுப்பி, குறைந்தது 16 புகார்களில் மொத்தம் $38,000 இழப்பு ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மோசடி செய்பவர்கள் பள்ளி மின்னஞ்சல் கணக்குகளை ஹேக் செய்து, உடனடியாக கட்டணம் செலுத்தாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டுகின்றனர். மின்னஞ்சலில் கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பிய பிறகே, பாதிக்கப்பட்டவர்கள் பள்ளியுடன் உறுதி செய்து கொள்ளும்போது மோசடி நடந்தது தெரியவருகிறது.
காவல்துறை எச்சரிக்கை விடுத்து, அதிகாரப் பூர்வ கல்வி நிறுவன வழிகள் மூலமே பணம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அந்நியர்கள் அனுப்பும் QR குறியீடுகள், வலைத்தள இணைப்புகள் போன்றவற்றை கிளிக் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சகமும் பெற்றோர் கேட்வே பயன்பாட்டின் மூலம் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, இத்தகைய மோசடிகளில் சிக்காமல் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.