சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாகவே காகங்களின் தொந்தரவு அதிகரித்து வரும் சூழலில் தேசிய பூங்கா சேவையானது மீண்டும் காகங்களை அழிக்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளது.
சிங்கப்பூர் தனது முதல் கட்டமாக காகங்களின் தாக்குதல்களை குறைக்கும் விதத்தில் ஜூரோங், பிஷான் மற்றும் பொங்கோல் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் காகங்களை அழிக்கும் நடவடிக்கையை மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த அதிகாரிகள் இன்று (மார்ச் 2 ஆம் தேதி) பிற்பகல் ஜுராங்கில் காகங்களை அழிக்கும் நடவடிக்கையும் மேற்கொண்டதில் 16 காகங்கள் சுட்டுக் கொல்லப்பட்டன.
கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) அன்று காகங்களை சுடும் நடவடிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து மொத்தமாக இதுவரை 40 காகங்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன என்ற அறிக்கையை தேசிய பூங்கா சேவை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இதனால் பொதுமக்களுக்கு விடுத்த ஊரடங்கு: இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜூரோங் வூலின் கனரக வாகனங்கள் நிறுத்தம் இடத்தில் துப்பாக்கி சூடும் பயிற்சி தளத்தை சுற்றி சுமார் 50 கிலோமீட்டர் அளவிற்கு ஊழியர்கள் பாதுகாப்பு வளையம் அமைத்து பொதுமக்கள் நுழையாத வண்ணம் கட்டுப்படுத்தும் அறிவிப்பு பலகைகளை வைத்ததை செய்தியாளர் ஒருவர் கவனித்து உள்ளார்.
அருகில் வரும் காகங்களை கவர்வதற்காகவும் சுடும் திறனை மேம்படுத்துவதற்கும் காகத்தின் கூவலை பிரதிபலிக்கும் சிமுலேட்டர்கள் பயன்படுத்தியும் அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
காகங்கள் சுடும் எல்லைக்குள் நுழைந்தவுடன் உரிமம் பெற்ற துப்பாக்கி சூடும் அதிகாரிகள் தற்செயலான காயங்களின் அபாயத்தை குறைக்கும் பொருட்டு தோட்டாக்கள் அவற்றை கொல்வதற்கு முன்பாக காற்றில் பயணிப்பதை உறுதி செய்யும் வகையில் ஷார்ட் கண்களை பயன்படுத்தி மேல் நோக்கி ஒருமுறை சுட்டு உறுதிப்படுத்தி கொள்கிறார்கள்.
துப்பாக்கி சுடுபவர்களுக்கு முன்னால் காகங்கள் வந்தாலும் அவர்கள் சில சமயங்களில் சுடாமல் இருப்பதை செய்தியாளர் கவனத்துள்ளார். அதிலும் முக்கியமாக அவை பாதுகாப்பான மேல்நோக்கி சுடும் எல்லைக்குள் இல்லாததை இதற்கு முக்கிய காரணம்.
காகங்கள் புத்திசாலித்தனமாக சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் திறன் கொண்டவை என்பதால், அவை துப்பாக்கி சுடுபவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை தாக்கக்கூட வாய்ப்பு உள்ளது.
சுடப்பட்ட 40 காகங்களை அதிகாரிகள் சேகரித்த அவற்றை எரித்து விடுவார்கள். மேலும் காயமடைந்த காகங்களுக்கு சம்பவ இடத்திலேயே பணியாளர்களால் மனிதாபிமான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பறக்கவிடப்படுகிறது.
“தேசிய பூங்காக்கள் வாரியம் தீங்கு விளைவிக்கும் பறவைகளை கட்டுப்படுத்த பயன்படுத்தும் வழிகளில் காகங்களை சுடுவது ஒரு வழி மட்டுமே உள்ளது. ஆனால் காகங்களை பிடித்தல் கூடுகளை அகற்றுதல் உணவு ஆதாரங்களை குறைத்தால் போன்ற தங்களது தற்போதைய காக மேலாண்மை நடவடிக்கை இது மேலும் வலுப்படுத்துகிறது” என்று பேசிய பூங்காக்கள் வாரியத்தின் வனவிலங்கு மேலாண்மை மற்றும் பரப்புரை பிரிவின் இயக்குனர் சூ செபின் கூறியுள்ளார்.
காகங்களுக்கு உணவளிக்காமல் இருப்பதன் மூலமாக பொதுமக்களும் அவர்களுடைய பங்களிப்பை செய்ய முடியும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பூங்காக்கள் வாரியத்தின் தரவுகளின் படி அப்பகுதியில் ஏறத்தாழ 1,60,000 காகங்கள் உள்ளன. இவற்றால் இரைச்சல் மற்றும் சுகாதார பிரச்சனைகளை ஏற்படும் என்ற அபாயம் எழுந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் காகங்களை தாக்குதல்கள் மும்மடங்கிற்கும் மேலாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டில் (2025) 2,000 ஐத் தாண்டி இருக்கிறது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.