“அக்கரைச் சீமை அழகினிலே” கதாநாயகி இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா?

“அக்கரைச் சீமை அழகினிலே” கதாநாயகி இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா?

பிரியா படத்தில் ரஜினிக்கு கதாநாயகியாக நடித்த நடிகையை யாரும் அவ்வளவாக மறந்திருக்க மாட்டோம். சிங்கப்பூரைப் பற்றி பலரும் அறிந்திராத அந்த காலத்திலேயே ” அக்கரைச் சீமையிலே மனம் ஆட கண்டேனே…” என்ற பாடல் வரிகள் மூலம் சிங்கப்பூரை நம் கண் முன்னே காட்டி பிரமிக்க வைத்திருப்பார்கள்.

வெளிநாடு என்றால் எப்படி இருக்கும் என்று பலரும் அறிந்ததே அந்த பாடலை வைத்து தான். அந்தப் பாடல் வரிகளும், காட்சிகளும் மக்களை வெகுவாக கவர்ந்தது என்றால் மற்றொருபுறம் அனைவரையும் ஈர்த்தது அந்தப் படத்தின் கதாநாயகி என கூறலாம்.

அஸ்னா ஹமீத் எனப்படும் மலேசியா கதாநாயகி மலாய் இந்திய பெண்ணாக நடித்திருப்பார். இதில் நடித்த சுபத்ரா எனப்படும் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார். அந்த கதாநாயகியின் சமீபத்திய புகைப்படம் தற்பொழுது வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.

70 வயதாகும் அஸ்னா மலேசியாவில் பல்வேறு ட்ராமாக்களில் நடித்து வருகின்றார். அது மட்டுமல்லாமல் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் வைத்து நடத்தி வருகின்றார். நாம் அனைவரும் பிரம்மித்துப் பார்த்த கதாநாயகியா இது என அவரின் தற்போதைய புகைப்படத்தை அனைவரும் ஷேர் செய்து வருகின்றனர்.