சிங்கப்பூரில் மறைந்த பிரபல முன்னாள் வழக்கறிஞர்..!!

சிங்கப்பூரில் மறைந்த பிரபல முன்னாள் வழக்கறிஞர்..!!

சிங்கப்பூரின் பிரபலமான முன்னாள் வழக்கறிஞர் M ரவி காலமானார். இவருக்கு வயது 56 ஆகும்.

இவர் வழக்கறிஞராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். மேலும் மனித உரிமை வழக்குகளில் பணியாற்றியவர்.

1969 இல் பிறந்த இவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலும், Cardiff பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார்.

திரு ரவி அவர்கள் 2013இல் இவரது வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக Kampong Boy என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

2019-ல் சொந்தமாக M Ravi Law என்றால் நிறுவனத்தை அமைத்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு இவர் சிங்கப்பூரில் வழக்கறிஞராக பணியாற்றுவதற்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தலைமை சட்ட அதிகாரியும் தலைமை சட்ட அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றுவோரும் முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட காரணத்திற்காக இவர் அடிப்படை இல்லாமல் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

ஆனால் அதே ஆண்டில், திரு ரவி அவர்களை மனித உரிமை வழக்குகளில் செய்த அறப்பணிக்காக அனைத்து உலக சட்ட அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு விருதும் வழங்கப்பட்டது.

திரு ரவி அவர்களின் இறப்பு குறித்து அவருடன் நெருக்கமாக பணியாற்றிய வழக்கறிஞர்கள் அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

“திரு ரவி அவர்கள் இலவசமாக சட்ட சேவை வழங்குவதற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் மிகவும் நல்ல நண்பர்”  என கூறினார் யூஜின் துரைசிங்கம்.

“திரு ரவி அவர்கள் என்னுடைய முன்மாதிரி மேலும் அவர் என்னுடைய தந்தையிடம் பேசிய பிறகு சட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு எனக்கு அனுமதி கிடைத்தது” என்று திரு அரிஃபின் கூறினார்.

சட்டத் தொழிலில் கால் பதிக்க திரு ரவி அவர்களை முக்கிய காரணம் எனவும் அரிஃபின் கூறினார்.