ரெட் லயன்ஸ் & கடற்படை – வானிலும், நீரிலும் வீரத்தால் கவரும் நிகழ்ச்சி..!!
சிங்கப்பூர்:2025 ஆம் ஆண்டின் தேசிய தின விழாவில், சிங்கப்பூரின் ரெட் லயன்ஸ் மற்றும் கடற்படை டைவிங் பிரிவின் வீரர்கள், வானில் துணிச்சல் காட்டி, நீரில் துல்லியமாக இறங்கும் பாராசூட்டிங் நிகழ்ச்சியை அரங்கேற்ற இருக்கின்றனர். இது, வீர உணர்வுக்கும், ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்குமான சிறந்த சின்னமாக விளங்குகிறது.
முதல் முறையாக, விழா நிகழ்வுகள் இரண்டு இடங்களில் நடக்கின்றன – நகர மண்டபத்தின் முன் உள்ள படாங் மற்றும் மெரினா விரிகுடா. இதன் மூலம், சிங்கப்பூரின் பல பகுதிகளிலுள்ள பொதுமக்கள், வீரர்களின் வானியல் காட்சியை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
கடற்படை டைவிங் பிரிவு மற்றும் ரெட் லயன்ஸ் குழுவிலிருந்து தலா 7 வீரர்கள் பங்கேற்கின்றனர். கடற்படை வீரர்கள், 60 கிலோ உபகரணங்களுடன், 6,000 அடி உயரத்திலிருந்து ஹெலிகாப்டரில் இருந்து பாய்ந்து, நீரில் தரையிறங்குகின்றனர். ரெட் லயன்ஸ் வீரர்கள், 10,000 அடி உயரத்திலிருந்து ஹெர்குலஸ் C-130 விமானத்தில் இருந்து குதித்து, படாங்கில் மிகுந்த துல்லியத்துடன் தரையிறங்குவர்.
“ஒருங்கிணைந்த செயல்பாட்டும், வெற்றிகரமான பாதுகாப்பும் இந்த நிகழ்ச்சியின் மையம்,” என கடற்படை பாராசூட் குழுத் தலைவர் முதல் வாரண்ட் அதிகாரி லின் ஜிஷெங் குறிப்பிட்டார்.
“இது சாதாரண ஸ்கைடைவிங் அல்ல… இது ஒரு போர் பாராசூட் மையமான காட்சி,” என்றும், வானிலிருந்து குதித்து தண்ணீரில் பாராசூட் அவிழ்த்து, துல்லியமாக மேடையை அடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ரெட் லயன்ஸ் குழுவின் தலைவர் சோ யிங்செங் கூறும்போது, “ஒற்றுமை ஒரு வட்டமாக வானில் உருவாக வேண்டும். அதற்காக ஒத்திசைவான நேரத்தில் கேபினை விட்டு வெளியேறும் திறமை அவசியம்” என சுட்டிக்காட்டினார்.
இந்த “ஒற்றுமையின் தாவல்” நிகழ்ச்சி, சிங்கப்பூரின் 60வது பிறந்த நாளில் நாட்டின் வீர உணர்வையும், கூட்டணியின் வலிமையையும் சிறப்பாக பிரதிபலிக்கிறது.