ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் பதக்கத்தை வென்றுள்ள சிங்கப்பூர்……

சீனாவின் Hangzhou நகரில் அக்டோபர் 24ஆம் தேதி அன்று ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் freestyle S7 இறுதிப்போட்டி நடைபெற்றது.

நடந்த இப்போட்டியில் சிங்கப்பூரைச் சேர்ந்த நீச்சல் வீரர் Toh Wei Soong வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

Hangzhou-வில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் வென்ற முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு Jakarta-வில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மூன்று பதக்கங்களை வென்றுள்ளார்.

2023ஆம் ஆண்டு கம்போடியாவில் நடைபெற்ற ASEAN பாரா விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்களை தட்டி சென்று சாதனை படைத்து, சிங்கப்பூருக்கு பெருமையை சேர்த்துள்ளார்.

Toh-விற்கு இது நான்காவது ஆசியப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.