சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீக்கு வழங்கப்பட்ட மே தின உயரிய விருது...!!!
தொழிலாளர் இயக்கத்தின் மிக உயர்ந்த மே தின விருது மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்காக நாற்பது ஆண்டுகால அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக திரு. லீக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
தொழிலாளர் இயக்கத்திற்கு சிறந்த மற்றும் தனித்துவமான பங்களிப்பாளர்களுக்கு மிக உயர்ந்த விருது வழங்கப்படுவதாக NTUC தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மெரினா பே சாண்ட்ஸ், மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் திரு.லீ மற்றும் 180 பேருக்கு மே தின விருது வழங்கப்பட்டது.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) தலைவர் கே. தனலெட்சுமி, திரு. லீக்கு ‘புகழ்பெற்ற தொழிலாளர் தோழர் விருதை’ வழங்கி கௌரவித்தார்.
இந்த மதிப்புமிக்க விருது 1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து ஏழு பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களில் சிங்கப்பூரின் ஸ்தாபக பிரதமர் லீ குவான் யூ, முன்னாள் பிரதமர் கோ சோக் டோங் மற்றும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஸ்டீபன் லீ ஆகியோர் அடங்குவர்.