டீன் ஏஜ் பெண்ணை நாய் கூண்டில் அடைத்து வைத்து சித்திரவதை…!!!

டீன் ஏஜ் பெண்ணை நாய் கூண்டில் அடைத்து வைத்து சித்திரவதை...!!!

அமெரிக்காவில் ஒரு டீனேஜ் பெண்ணை நாய் கூண்டில் அடைத்து வைத்து துன்புறுத்திய குற்றத்திற்காக தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நியூ ஜெர்சி மாநிலத்தில் நடந்தது.

18 வயது பெண்ணை ஏழு ஆண்டுகளாக துன்புறுத்தியதாக தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

கடந்த வாரம் அந்தப் பெண் தம்பதியிடமிருந்து தப்பிச் சென்றார்.

38 வயதான பிரண்டா ஸ்பென்சர் மற்றும் 41 வயதான பிராண்டன் மோஸ்லி ஆகியோர் 2018 முதல் தன்னைத் துன்புறுத்தி வருவதாக அந்தப் பெண் கூறினார்.

அந்தப் பெண்ணின் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி அவரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த மாதம் மே 8 ஆம் தேதி (மே 2025) அந்தப் பெண் தனது வீட்டிலிருந்து தப்பிச் சென்று அண்டை வீட்டாரிடம் உதவி கோரினார்.

வீட்டில் மிகவும் மோசமான நிலையில் தான் வைக்கப்பட்டதாக அந்தப் பெண் அதிகாரிகளிடம் கூறினார்.