உணவகத்தில் கைவரிசையை காட்டிய நபர்..!! 7 மணி நேரத்திற்குள் பிடிபட்டது எப்படி..??

உணவகத்தில் கைவரிசையை காட்டிய நபர்..!! 7 மணி நேரத்திற்குள் பிடிபட்டது எப்படி..??

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் சுன் டின் சாலையில் உள்ள ஒரு உணவகத்திற்குள் புகுந்து S$155 ரொக்கம் திருடியதாக சந்தேகிக்கப்படும் 55 வயது நபர் மீது நாளை (16.12.25) கொள்ளை குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது.

நேற்று (14.12.25) காலை 11:42 மணியளவில் உணவகம் திருடப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கிளெமென்டி காவல் நிலையம் மற்றும் காவல் செயல்பாட்டுக் கட்டளை மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

புகார் கிடைத்த ஏழு மணி நேரத்திற்குள் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.

மேலும் அவரிடமிருந்து திருடப்பட்ட பணமும் மீட்கப்பட்டது.

திருட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த நபருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை,அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK