நிலச்சரிவில் சிக்கிய இரண்டு படகுகள்..!! 12 பேர் உயிரிழப்பு..!!

நிலச்சரிவில் சிக்கிய இரண்டு படகுகள்..!! 12 பேர் உயிரிழப்பு..!!

தென் அமெரிக்கா நாடான பெருநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஆற்றப்படுகையில் படகு துறையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு படகுகள் நீரில் மூழ்கியது.

இந்த படைகள் இருந்த மூன்று குழந்தைகள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மாயமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மூழ்கிய படகுகளில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த தெளிவான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆனால் ஒரு படைகள் சுமார் 50 பேர் இருந்ததாக அந்த காலத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தவர்களில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஆற்றில் பாயும் நீரின் வேகம் மற்றும் நீர் சுழற்சி காரணமாக மிகவும் சவாலாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த காலத்தில் வெள்ளப்பெருக்கு அதிகம் ஏற்படும் காலம் என்பதாலும், சம்பவ இடத்தில் பனிமூட்டம் அதிகம் இருப்பதாகவும் மீட்பு பணியில் ஈடுபட சற்று சிரமமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK