கனமழையால் 27 பேர் மரணமா?எங்கு?

கனமழையால் 27 பேர் மரணமா? எங்கு?

மெக்சிகோ நகரில் உள்ள பாஜா கலிபோர்னியா தீபகற்பத்திலும் மெக்சிகோவின் மேற்கு பசிபிக் கடலோர பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய புயல்கள் உருவாகி அப்பகுதி முழுவதும் கனமழை ஏற்பட்டு வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.

இதனால் பெரும்பாலான இடங்களில் பல நிலச்சரிவுகளும் மின்தடைகளும் ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக ஆறுகள் முழுவதும் நிரம்பி வழிந்து ஓடியது.

ஹிடால்கோ மாநிலத்தில் 1,000 வீடுகளும் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளும் சேதமடைந்துள்ளன.

இதில் குறைந்தபட்சம் 16 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

புவேபலா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக குறைந்தது ஒன்பது பேரும் இறந்துள்ளனர். இதில் 5 பேரின் உடல்கள் மாயமாகியுள்ளது.

பேரா குரூஸ் மாநிலத்தில் ஏற்பட்ட கனமழையில் இரண்டு பேர் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மொத்தமாக மெக்சிகோ நகரில் குறைந்தது 27 பேர் இறந்துள்ளனர் என்பதையும் இன்னும் பல பேரை காணவில்லை என்பதையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் நிலைமையை கண்காணிக்கவும் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை சுத்தப்படுத்தவும் 5,400க்கும் மேற்பட்ட அதிகாரிகளை பணியில் அமர்த்தியுள்ளதாக மெக்சிகோவின் தற்காப்பு அமைப்பு கூறியுள்ளது.

அவசரகால மீட்பு படையினர் முழங்கால் அளவுள்ள வெள்ள நீரில் மீட்பு பணிகளில் ஈடுபடும் படங்களை மெக்ஸகோ அதிபரான கிளோடியா ஷைன்பவும் அவரின் எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK