சிங்கப்பூரில் எட்டு பேர் கைது..!! காரணம் என்ன?

சிங்கப்பூரில் எட்டு பேர் கைது..!! காரணம் என்ன?

சிங்கப்பூரில் கடலோர காவல் படை அதிகாரிகள் துவாஸ் அருகே நாள்தோறும் சோதனை நடத்துவது போல அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் பதிவாகியுள்ள படையில் இருந்த மூன்று பணியாளர்களை சந்தேகத்தின் பேரில் முதலில் கைது செய்தனர்.

அந்த படகில் சட்டவிரோதமான 92 சிகரெட்டுகள் இருப்பதை அதிகாரிகள் சோதனையின் போது கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்தனர்.

பணியாளர்கள் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெயை ரகசியமாக விற்றதையும் முதற்கட்ட விசாரணையின் போது அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதன் மதிப்பு சுமார் 7,000 வெள்ளியாகும்.

மேலும் வெளிநாட்டில் பதிவாகியுள்ள படகு ஒன்றில் பணியாற்றிய பணியாளர்கள் எண்ணையை சட்டவிரோதமாக வாங்கியது தெரிய வந்தது.

 

உடனே அதிகாரிகள் அந்த படகை மரித்து சோதனையில் ஈடுபட்டனர். வெளிநாட்டு படகு பறிமுதல் செய்யப்பட்டது அதில் உள்ள பணியாளர்களும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

மொத்தமாக 8 பணியாளர்கள் கைது செய்யப்பட்டு நேற்று (11/10/2025) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை காவல்துறை கூறியுள்ளது.

எண்ணெயை விற்றவர்கள் மீது நம்பிக்கை மோசடி வழக்கும், வாங்கியவர்கள் மீது திருடிய பொருளை வாங்கிய குற்றமும் சாட்டப்படும்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK