சிங்கப்பூரில் எல்லை பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்..!!90 பேருக்கு அபராதம்..!!

சிங்கப்பூரில் எல்லை பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்..!!90 பேருக்கு அபராதம்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் எல்லை தாண்டிய பணம் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் சிங்கப்பூரில் கடந்த வாரம் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பல்வேறு அரசுத் துறைகள் கூட்டு சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 90 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கூட்டு நடவடிக்கையில் காவல்துறை, குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம், சிங்கப்பூர் சுங்கம் மற்றும் சுகாதார அறிவியல் ஆணையம் கலந்து கொண்டது. நிலம், சுங்கம் மற்றும் வான் சோதனைச் சாவடிகள் மூலம் 14,000க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 280 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.மேலும் 11,000க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் கைப்பைகள் சோதனைக்கு உட்பட்டன.

பண அறிவிப்பு மீறலில் 11 பயணிகள் S$20,000 க்கும் அதிகமான பணத்தை தவறாக அறிவித்தனர்.அவர்களில் நான்கு பேர் பல்வேறு நாணயங்களில் S$1.2 மில்லியனுக்கு மேல் பணத்தை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்தனர்.ஆறு பேருக்கு மொத்தமாக S$24,000 அபராதம் விதிக்கப்பட்டது.ஒருவர் விசாரணையில் உள்ளார்.

சிங்கப்பூரில் அல்லது வெளியே S$20,000 க்கும் அதிகமான பணத்தை எடுத்துச் செல்லும் பயணிகள் அதனை அறிவிக்க வேண்டும். தவறினால் S$50,000 வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

சுங்கத்துறை அதிகாரிகள் 62 பேரிடம் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தது. மொத்த வரி ஏய்ப்பு S$7,300தாண்டியது.மேலும் 14 பேரிடமிருந்து 395 மின்-சிகரெட் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மற்றொரு நபர் மெல்லும் புகையிலை எடுத்துச் சென்றார். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அறிவியல் ஆணையம், சட்டவிரோதமாக மின்-சிகரெட்டுகள் அல்லது துணைப் பொருட்களை எடுத்துச் சென்ற 14 பேரைப் பிடித்து, 395 மின்-சிகரெட் பொருட்களைப் பறிமுதல் செய்தது.மற்றொரு நபர் மெல்லும் புகையிலையை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK