“குட் பேட் அக்லி” படத்திற்குப் பிறகு அஜித் அவரது அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.
ஆனால் அவர் நடிக்கும் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போவதாக முடிவாகிவிட்டது. அந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
அஜித் படத்திற்கு கேட்ட சம்பளத்தைத் தர 3 தயாரிப்பு நிறுவனங்களுமே முன்வரவில்லை. தயாரிப்பு நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டபோதும் அஜித் அதற்கு ஒத்து வரவில்லை.
அஜித் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள தயாராக இல்லாததால், சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்க உள்ளதாக அஜித் முடிவு செய்துள்ளார்.
தன் படங்களைத் தானே தயாரித்து அதில் நடிக்க இருப்பதாக அவர் முடிவெடுத்துள்ளார்.