பாகுபலி 3 அப்டேட் வந்துடுச்சா..?? ராணா உடைத்த ரகசியம்..!!

பாகுபலி 3 அப்டேட் வந்துடுச்சா..?? ராணா உடைத்த ரகசியம்..!!

ராஜமௌலி இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டில் வெளியான பாகுபலி படம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.

இதன் இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது.

பாகுபலி படம் மூலமாக பிரபாஸ், ராணா, அனுஷ்கா இந்திய அளவில் கவனிக்கப்படும் பிரபலங்களாக மாறினார்கள்.

சமீப காலமாக பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகலாம் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) சார்பில் வெளியான ‘பாகுபலி தி டார்ச்பேரர்’ (Baahubali: The Torchbearer) ஆவணப்படத்தின் பிரத்யேக நேர்காணலில் ராணா பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

ராணா கூறியதாவது: இதை நான் பொதுவெளியில் சொல்லலாமா என்று தெரியவில்லை. ஆனால் ராஜமௌலி இல்லாததால் சொல்கிறேன்.’ உலகம் இன்னும் தயாராக இல்லாமல் இருக்கலாம், ஆனால் பாகுபலி நிச்சயம் இருக்கும்’ என்றார்.

அப்போது பிரபாஸ் 3 விரல்களை காட்டியது அதற்கு அனுஷ்கா உட்பட அனைவருமே மகிழ்ச்சியுடன் சிரித்தது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், இந்த கலகலப்பான தருணம் பாகுபலி – 3 உருவாகலாம் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK