ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக நாணய கொள்கையை……

ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக நாணய கொள்கையை......

சிங்கப்பூர்:சிங்கப்பூர் நாணய வாரியம் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது நாணயவியல் கொள்கையை தளர்த்தியுள்ளது.

இந்த ஆண்டு குறைந்த வளர்ச்சி மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம் ஆகியவற்றின் பின்னணியில் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

உலக மற்றும் பிராந்திய பொருளாதார நிலைமைகளை வாரியம் தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவித்தது.

பணவீக்கம் மற்றும் வளர்ச்சிக்கான அபாயங்கள் குறித்து அறிந்து முனைப்புடன் செயல்படும்.

முன்னதாக, கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட மந்தநிலையைச் சமாளிக்க மார்ச் 2020 இல் வாரியம் அதன் நாணயவியல் கொள்கையைத் தளர்த்தியது.

இந்த ஆண்டுக்கான முக்கிய பணவீக்கம் இரண்டு சதவீதத்திற்குள் இருக்கும் என்று வாரியம் கணித்துள்ளது.

பணவீக்கம் எதிர்பார்த்ததை விட வேகமாக குறைவதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan