ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையே அமைக்கப்படவுள்ள புதிய பாலம்..!!!

ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையில் சாலை மார்க்கமாக ஒரு புதிய இணைப்புப் பாலம் கட்டப்பட உள்ளது.இது இரு நாடுகளின் நட்புறவை எடுத்துக்காட்டும் வகையில் ‘நட்புப் பாலம்’ என்று அழைக்கப்படும்.

இதன் கட்டுமானம் தற்போது தொடங்கிவிட்டது.துமென் ஆற்றின் மீது ஒரு புதிய ‘நட்பு பாலம்’ அமைக்கப்பட உள்ளது.

McDonald’s விற்பனை குறைவு!! கூடுதல் சலுகைகள் வழங்க திட்டம்!!

இது 850 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். ‘நட்புப் பாலம்’ 2026 இல் அதன் கட்டுமான பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தொடக்க விழாவில் ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டின் மற்றும் வட கொரிய பிரதமர் பாக் தே-சாங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடகொரியாவிற்கு கடந்த ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சென்றபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

புதிய பாலம் அதிக போக்குவரத்தை அனுமதிக்கும் என்று ரஷ்ய பிரதமர் மிஷுஸ்டின் கூறினார்.

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம்..!!

இது போக்குவரத்து செலவுகளை பெருமளவில் குறைக்கும் என்றும், சந்தைப்படுத்துதலை எளிதாக்கவும் உதவும் என்று அவர் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே ஒரு ரயில் பாலம் உள்ளது.இது கொரியப் போருக்குப் பிறகு 1959 இல் கட்டப்பட்டது. அந்தப் பாலத்தின் அருகே புதிய ‘நட்பு பாலம்’ கட்டப்பட உள்ளது.

இந்தப் பாலம் வட கொரியாவிலிருந்து ரஷ்ய நெடுஞ்சாலை கட்டமைப்புடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us on : click here

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilan