பாலித்தீவில் மின்சாரம் வழக்க நிலைக்குத் திரும்பியது..!!!

பாலித்தீவில் மின்சாரம் வழக்க நிலைக்குத் திரும்பியது..!!!

இந்தோனேசிய தீவான பாலியில் மின்சாரம் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (மே 2) மின் தடையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் படிப்படியாக
திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின்சார விநியோகம் வழக்க நிலைக்கு திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

நேற்று மாலை 4 மணியளவில் பாலியின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

இதனால் விமான நிலையமும் பாதிக்கப்பட்டது.

ஜெனரேட்டர்கள் மூலம் விமானங்கள் வழக்கம் போல் இயங்கின. ஒரு சில விமான சேவைகள் மட்டும் தாமதமாகின.

மின்தடை ஏற்பட்ட ஒரு சில மணி நேரங்களுக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது.

பாலியின் மின்சார கட்டமைப்பை ஜாவா தீவுடன் இணைக்கும் கடலுக்கடியில் உள்ள கேபிள்களில் ஏற்பட்ட கோளாறால் இந்த மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.