என்ன..!! நீண்ட நேரம் தூங்கினால் அறிவாற்றல் அதிகரிக்குமா…???

என்ன..!! நீண்ட நேரம் தூங்கினால் அறிவாற்றல் அதிகரிக்குமா...???

இளம் பருவத்தினரின் தூக்கத்தில் ஏற்படும் சிறிய மாறுதல்கள் கூட அவர்களின் அறிவாற்றல் திறன்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியந்தனர்.

ஆம். இரவில் சீக்கிரமாகப் படுக்கைக்குச் சென்று நீண்ட நேரம் தூங்கும் டீனேஜர்களின் மூளை கூர்மையானதாகவும், சிறந்த அறிவாற்றல் செயல்பாடு கொண்டதாகவும் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் சுமார் 3,000 டீனேஜர்கள் கலந்து கொண்டனர்.

இதில் நீண்ட நேரம் தூங்கியவர்களின் வாசிப்புத் திறன் சிறந்ததாகவும், சொல்வளம் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்கள் சிறப்பாக இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.

“தூக்கத்தின் போது நினைவாற்றல் பலப்படுத்தப்படுகிறது.எனவே தூக்கம் சிறந்த அறிவாற்றலுக்குக் காரணம் என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் உளவியல் பேராசிரியர் பார்பரா சஹாகியன் கூறினார்.

சிறந்த தூக்கப் பழக்கம் உள்ளவர்கள் கூட நிபுணர்கள் பரிந்துரைப்பதை விட குறைவான தூக்கத்தைப் பெறுகிறார்கள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசின், 13 முதல் 18 வயதுடைய டீனேஜர்கள் ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் தூங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.