என்ன..!!!உகாண்டாவில் பெண்கள் ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்களா…??

என்ன..!!!உகாண்டாவில் பெண்கள் ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்களா...??

உகாண்டாவில் பெண்கள் ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள்.

எத்தியோப்பியாவிற்குப் பிறகு, ஆப்பிரிக்காவில் இரண்டாவது பெரிய காபி உற்பத்தியாளராக உகாண்டா உள்ளது.

காபி உற்பத்தித் துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களின் கணவன்மார்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள்.

இதனால் பெண்கள் அவர்களின் நிதிச் சுமையை அவர்களே கையாள்கின்றனர்.

இந்தத் தொழிலைப் பொறுத்தவரை காபி விதைகளை பயிரிட்டு அறுவடை செய்து, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்போது மட்டுமே ஆண்கள் தலையிடுவார்கள்.

ஆனால் இப்போது அது மாறிவிட்டது.

பெண்கள் பேக்கேஜிங் மற்றும் காபி விநியோகிக்கும் தொழிலிலும் ஈடுபடுகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் இந்த நிறுவனத்தில் இருந்து முற்றிலும் விலகி இருந்தனர்.

இப்போது,600க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு வேலை செய்கிறார்கள்.

குடும்பத்தில் கடினமாக உழைக்கும் பெண்களுக்கு பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அதிகம் வழங்கப்படவில்லை.

இந்த நீண்டகால நடைமுறையை மாற்ற நிறுவனம் விரும்பியது.

அறுவடை காலத்தில் ஆண்கள் வீட்டிற்கு கொண்டு வரும் பணத்திலிருந்து மட்டுமே அவர்கள் பணத்தை செலவிட வேண்டியிருந்தது.

இந்த மாற்றத்தால் உகாண்டாவில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக மரியாதை மற்றும் மதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.