மத்திய அமெரிக்காவை தாக்கிய சூறாவளியால் 27 பேர் பலி..!!!

மத்திய அமெரிக்காவை தாக்கிய சூறாவளியால் 27 பேர் பலி..!!!

மத்திய அமெரிக்காவில் வரலாறு காணாத கடுமையான சூறாவளி தாக்கியது.

இந்த சூறாவளியில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர். 

கெண்ட்டக்கி மற்றும் மிஸொரி மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிஸொரியின் செயின்ட் லூயிஸில் மட்டும் சுமார் 5,000 கட்டிடங்கள் சேதமடைந்தன.

அங்கு மின் தடையால் 300,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மக்கள் தங்குவதற்கு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கெண்ட்டக்கி மற்றும் மிஸொரியில் தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.