வட்டப்பாதை ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது…!!!

வட்டப்பாதை ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது...!!!

சிங்கப்பூர்: பாயா லெபார் ரயில் நிலையத்திலிருந்து புவன விஸ்தா நிலையம் வரை போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

SMRT காலை 8.26 மணிக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டது.

இதனால் வட்டப்பாதையில் பாயா லெபார் நிலையத்திற்கும் புவன விஸ்தா நிலையத்திற்கும் இடையிலான சேவையில் பயணிகள் தாமதங்களை எதிர்கொண்டனர்.

இதனால் செராங்கூன் நிலையத்திலிருந்து புவன விஸ்தா நிலையத்திற்கு இரு திசைகளிலும் இலவச பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்நிலையில் காலை 8.41 மணிக்கு ரயில் சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புவதாக SMRT அறிவித்தது.

இலவச பேருந்து சேவையும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.

10 நிமிடங்களுக்குப் பிறகு ரயில் சேவைகள் முழுமையாக மீட்டமைக்கப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.

SMRT ஃபேஸ்புக் பதிவில் ஒரு இணையவாசி, தான் செராங்கூன் நிலையத்தில் 20 நிமிடங்கள் காத்திருந்ததாக கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு இணையவாசி, கெல்டிகாட் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்ததாகக் கூறினார்.