இந்தோனேசிய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் மதிப்புள்ள போதை பொருள்..!!

இந்தோனேசிய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் மதிப்புள்ள போதை பொருள்..!!

இந்தோனேசிய அதிகாரிகள் 2 டன் படிக மெத்தம்பேட்டமைனை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தமான் கடல் வழியாக பாத்தாம் தீவுக்குச் சென்று கொண்டிருந்த இந்தோனேசிய படகில் அதிக அளவு போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் ஒரு மீன்பிடிப் படகில் அவற்றை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், இந்தோனேசிய அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, ​​2,000 பொட்டலங்களில் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தோனேசியாவில் இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் இது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தோனேசிய அதிகாரிகள் ஐந்து மாதங்களாக இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 308 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத போதைப்பொருள் தாய்லாந்து,லாவோஸ் மற்றும் மியான்மரின் ‘தங்க முக்கோணம்’ என்று அழைக்கப்படும் பகுதியில் தயாரிக்கப்பட்டது.

மேலும் இந்தோனேசிய கடத்தல்காரர்களுடன் இணைந்து செயல்படும் ஒரு கும்பலால் இது கடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.