முகம் எப்போதும் பொலிவிழந்து காணப்படுகிறதா? இதோ உங்களுக்கான நேச்சுரல் டோனர்…!!

முகம் எப்போதும் பொலிவிழந்து காணப்படுகிறதா? இதோ உங்களுக்கான நேச்சுரல் டோனர்...!!

அனைவருக்கும் தங்களது சருமம் பொலிவுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பொதுவாக வறண்ட சருமம் கொண்டவர்களாக இருந்தால் முகமானது வறண்டு பொலிவிழந்து காணப்படும்.சருமம் எண்ணெய் பசை இல்லாமல் இருந்தால் தோல் அரிப்பு ஏற்பட்டு, அதன் மென்மை தன்மையை இழந்து பொலிவிழந்து
காணப்படும்.இந்த விஷயத்தில், வறண்ட சருமம் உள்ளவர்கள் தங்கள் சருமத்திற்கு சரியான பராமரிப்பு அளிப்பது அவசியம்

இருப்பினும் வறண்ட சருமம் கொண்டவர்கள் சாதாரண ஃபேஸ் பேக்குகளை மட்டும் பயன்படுத்தாமல் சருமத்திற்கு ஸ்க்ரப்கள், டோனர்கள் போன்றவற்றையும் பயன்படுத்த வேண்டும்.

டோனர்கள் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்று பலர் நினைக்கிறார்கள்.ஆனால் வறண்ட சருமம் உள்ளவர்களும் அவற்றைப் பயன்படுத்தலாம். டோனர்கள் சருமத் துளைகளில் இருந்து அழுக்குகளை அகற்றவும், சருமத்தின் pH அளவைப் பராமரிக்கவும், சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும் உதவுகின்றன.

டோனர்கள் துளைகளை சுருக்கி சருமத்தின் அழகை மேம்படுத்துகின்றன.மேலும் நீங்கள் செயற்கையான டோனர்களைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், வீட்டின் சமையலறையில் கிடைக்கும் சில பொருட்களை வைத்தே டோனர்களாக பயன்படுத்தலாம்.

🔶️ பப்பாளி

✨️இந்த டோனருக்கு, ஒரு பழுத்த பப்பாளியை எடுத்து அதை ஒரு ஜாரில் போட்டு அதனுடன் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும்.

✨️ பின்னர் அதை உங்கள் முகத்தில் தெளித்து துடைக்கவும்.

✨️இந்த பப்பாளி டோனரை 4-5 நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

🔶️ கிரீன் டீ

✨️இந்த டோனருக்கு, 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, 3 கிரீன் டீ பைகளை தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

✨️பின்னர் கிரீன் டீயை நன்றாக ஆறவைத்து, ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைக்கவும்.

✨️பின்னர் அதை தினமும் உங்கள் முகத்தில் தெளித்து துடைக்கவும்.


🔶️ தக்காளி

✨️இந்த டோனருக்கு, ஒரு சிறிய தக்காளியை மிக்ஸி ஜாடியில் போட்டு நன்றாக அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும்.

✨️பிறகு அதில் 3 தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி கலக்கவும்.

✨️பிறகு ஒரு பஞ்சு உருண்டையை எடுத்து, அதை நனைத்து, முகத்தைத் துடைக்கவும்.

✨️தக்காளி டோனர் தயாரானதும், அதை 2 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

🔶️ ஆப்பிள் சீடர் வினிகர்

✨️ ஒரு பாத்திரத்தில் 1 பங்கு ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்து அதனுடன் 3 பங்கு தண்ணீர் கலந்து ஒரு பாட்டிலில் எடுத்துக் கொள்ளவும்.

✨️ பிறகு ஒரு பஞ்சு உருண்டையை எடுத்து, ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து, முகத்தைத் துடைக்கவும்.

✨️ இல்லையென்றால், நீங்கள் அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, உங்கள் முகத்தில் தெளித்து, துடைத்துவிடலாம்.

✨️ இப்படி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்து வந்தால் வறண்ட சருமம் நீங்கி சருமம் பொலிவடையும்.