பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது...!!!
நம் பாட்டி காலத்தில் பெண்கள் 13 அல்லது 14 வயதிலேயே பருவமடைவார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் 9 முதல் 12 வயதுக்குள் பருவமடைகிறார்கள். அவர்களுக்கு மிகவும் இளம் வயதிலேயே மாதவிடாய் தொடங்கிவிடுகிறது. இப்படி சிறுவயதிலேயே பெண்கள் பூப்படைவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கு காண்போம்.
இப்போதெல்லாம், பல குழந்தைகள் வீட்டில் சமைக்கும் உணவை விட துரித உணவையே அதிகம் விரும்புகிறார்கள்.
இது அவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.வெளியில் தயாரிக்கப்படும் உணவில் ஹார்மோன்களைப் பாதிக்கும் பல ரசாயனங்கள் உள்ளன. இதனால்தான் பெண்களுக்கு மிகச் சிறிய வயதிலேயே மாதவிடாய் தொடங்குகிறது.
இதுவும் எடை அதிகரிப்பிற்கு காரணமாகிறது. எடை அதிகரிப்பு பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது. எடை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக மாதவிடாய் சிறு வயதிலேயே தொடங்குகிறது.
இப்போது சிறு குழந்தைகள் கூட படிப்பு மற்றும் பிற விஷயங்களால் மன அழுத்தத்தில் உள்ளனர். மன அழுத்தம் ஏற்பட்டால் அது ஹார்மோன்களை பாதிக்கிறது.பிளாஸ்டிக் மற்றும் ரசாயனம் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவதால் மாதவிடாயில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டு, முன்கூட்டியே மாதவிடாய் ஏற்படுகிறது.
முன்கூட்டிய பருவமடைதல் என்பது ஒரு நோயல்ல. ஆனால் 7-8 வயதுக்கு முன் ஏற்பட்டால், அதை ஒரு நோயாகக் கருதலாம். அப்படி நடக்கும்போது, குழந்தைகள் இளம் வயதிலேயே பெரியவர்களைப் போலத் தெரிகிறார்கள்.இது உடல், எலும்புகள் மற்றும் வளர்ச்சியை பாதிக்கிறது. எனவே நீங்கள் உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.
தடுக்கும் முறைகள்:
சரியான உணவுமுறை மற்றும் நல்ல வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவைக் கொடுங்கள். வீட்டில் சமைத்த உணவு, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட முயற்சிக்க வேண்டும். துரித உணவுகள் மற்றும் வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும்.படிப்பு மற்றும் பிற விஷயங்களில் குழந்தைகள் மீது அழுத்தம் கொடுக்கக்கூடாது.அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.