இனிமேல் TEP Pass இல் செல்ல முடியாதா? உண்மையான நிலவரம் என்ன?

சிங்கப்பூர் : பயிற்சி வேலை அனுமதியை நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துகின்றனவா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் வேலை சார்ந்த பயிற்சிக்கு பயிற்சி வேலை அனுமதியைக் கொண்ட வெளிநாட்டவர்கள் செல்லலாம்.
வெளிநாட்டு மாணவர்கள் அல்லது வெளிநாட்டு கிளைகளில் பணிபுரியும் ஊழியர்களை சிங்கப்பூரில் வேலைக்கு எடுக்க விரும்பும் நிறுவனங்கள் பயிற்சி வேலை அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் .
இது போன்ற விண்ணப்பங்களுக்கு கூடுதல் ஆதாரங்கள் கேட்கப்படுவதாக அமைச்சகம் கூறியது.
வெளிநாட்டு மாணவர்களை வேலைக்கு அமர்த்த :
அந்த வேலையானது அவர்களின் படிப்பின் ஓர் பகுதியாக இருக்க வேண்டும்.
அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய கழகத்தில் படிக்க வேண்டும்.
அல்லது அவர்கள் மாதத்திற்க்கு குறைந்தது 3000 வெள்ளி சம்பளமாக பெற வேண்டும் என்று அமைச்சகம் கூறியது.
நிறுவனத்தின் வெளிநாட்டு கிளையில் இருந்து வேலை செய்பவரை சிங்கப்பூரில் வேலைக்கு அமர்த்த :
அவர்கள் மாதம் குறைந்தது 3000 வெள்ளி சம்பளமாக பெற வேண்டும்.
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2025 (இவ்வாண்டு) ஏப்ரல் மாதம் வரை பயிற்சி வேலை அனுமதியின் கீழ் வேலை செய்யும் 13 ஊழியர்களைச் சந்தித்ததாக Transient Workers Count Too அமைப்பு தெரிவித்தது.
அவர்களில் பலருக்கும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதைவிட குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக அமைச்சகம் கூறியது.
அதோடு அவர்களின் வேலை நேரமும் அதிகமாக இருந்ததாக அமைப்பு கூறியது.
பயிற்சி வேலை அனுமதிகளை தவறாக பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan