வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்பவர்கள்!! மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்!!

வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்பவர்கள்!! மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்!!

சிங்கப்பூருக்கு செல்வதற்கு ஏஜென்ட்களிடம் பணம் செலுத்தி செல்லும் நிலை நிலவுகிறது.தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான வேலைகளுக்கு முன்பணம் வாங்குகிறார்கள்.ஆனால் இதிலும் மோசடி நடக்கிறது.

போலி ஏஜென்ட்கள் சிலர் வேலை வாங்கி தருவதாக கூறி முன்பணமாக ஓர் குறிப்பிட்ட தொகையைப் பெற்று கொண்டு ஏமாற்றுகிறார்கள்.ஒரு சில ஏஜென்ட்கள் முன்பணம் பெறாமல் வேலை வாங்கி கொடுப்பவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.

முன்பணம் பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஏற்பாடு செய்பவர்களும் ஒரு சில பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் சிலர் டாக்குமெண்ட்களை அவர்களிடம் கொடுத்து வேலைக்கு ஏற்பாடு செய்து தர சொல்கிறார்கள்.

அவர்களுக்கான IP யும் வந்து விடுகிறது.அவர்களுக்கு IP கிடைக்கும் வரை அவர்களிடம் இருந்து ஏஜென்ட்கள் ஒரு ரூபாய் கூட வாங்குவதில்லை. ஆனால் ஏஜென்ட்கள் அவர்களைத் தொடர்பு கொண்டாலும் எடுப்பதில்லை.

இதனால் ஏஜென்ட்கள் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். முன்பணம் பெறாமல் வேலை வாங்கி தரும் ஏஜென்ட்களிடம் நியாயமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள்.தற்போது வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தால் உங்களால் செல்ல முடியுமா? முடியாதா? என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். அதைப் பொறுத்து வெளிநாட்டிற்கு செல்வதற்கான நடவடிக்கையை எடுங்கள்.